ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் 2026/27 ரோட்டரி வருடத்திற்கான புதிய தலைவராக ரோட்டேரியன் சண்முகப்பாண்டியன் ஹரிபிரசாத் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.
புதிய தலைவர் பதவியேற்பு விழா மட்டக்களப்பிலுள்ள தனியார் விருந்தகத்தில் நடைபெற்றதுடன், பாரம்பரிய முறைப்படி அதிதிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய அங்கத்தவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கான சின்னங்களும் வழங்கப்பட்டன. சிறப்பு அதிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன், விழாவை சிறப்பிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் குமார் சுந்தரராஜ் மற்றும் அவரது பாரியார் சாந்தலா குமார் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
மேலும், மாவட்ட செயலாளர் ரோட்டேரியன் இயன் இத்தமல்கொட, உதவி ஆளுநர் ரோட்டேரியன் ஜெயபாலன் கணேசன், முன்னாள் ஆளுநர் ரோட்டேரியன் டெல்வின் பெரேரா, முன்னாள் தலைவர் ரோட்டேரியன் க. நவநீதன் உள்ளிட்ட பல ரோட்டரி உறுப்பினர்களும் ரோட்டரி குடும்பத்தினரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
பதவியேற்ற புதிய தலைவர் ஹரிபிரசாத், கழகத்தின் சமூக சேவைப் பணிகளை மேலும் வலுப்படுத்தி, அதன் சேவைப் பாரம்பரியத்தை தொடர்வதற்கான உறுதியை வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வு ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் சமூக சேவை மற்றும் தலைமைத்துவப் பயணத்தில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்தது.








