அனுராதபுரம், கொரகஹவெவ பகுதியில் உள்ள வனப்பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன், பின்னர் அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (28) முற்பகல் குறித்த நபர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கொரகஹவெவ வனப்பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் கணவன் தன்னையும் அதே ஆயுதத்தால் குத்திக்கொண்டு காயமடைந்த நிலையில், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







