பொரளை – சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வைத்து பொலிஸாரின் கட்டளையை மீறி குறித்த முச்சக்கரவண்டி செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில், அதனை சோதனையிட்ட பொலிஸார் மூன்று வாள்களை கைப்பற்றியுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் கொலன்னாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








