முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்தன. சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஷ தங்களுக்கு சாதகமான நண்பர்களை நீதியரசர்களை கொண்டு வந்தனர். அதே வேலையைத்தான் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார். எனவே பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது என்பதால் அதிபரின் வயதை கூட்டினால் சரியா? என முன்னணி சோஷிஸக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் முன்னணி சோஷிஸக் கட்சி ” 22 வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘என்ன இந்த 22 வது திருத்தச் சட்டம் ஏன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது’ என்ற தலைப்பிலான துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை மட்டு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் நேற்று புதன்கிழமை (02) கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் தோழர் முனசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,







