இலங்கையின் அனிமேஷன் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்த சிரேஷ்ட அனிமேஷன் கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கிவந்த அர்த்தசத் தனது 73ஆவது வயதில் காலமானார்.
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய பெருமைக்குரிய கிவந்த அர்த்தசத், நாட்டின் அனிமேஷன் மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
அவர் சிரேஷ்ட திரைப்பட இயக்குநர் தினேஷ் பிரியசாத்தின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனிமேஷன் துறையில் அவர் மேற்கொண்ட முன்னோடிப் பணிகள், இலங்கை சினிமா வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகின்றன.
அவரது மறைவுக்கு திரைத்துறை சார்ந்த பலரும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.








