Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண குழந்தைகளுக்காக புதிய பாதையில் யுனிசெஃப்; ஆளுநருடன் முக்கிய சந்திப்பு

கிழக்கு மாகாண குழந்தைகளுக்காக புதிய பாதையில் யுனிசெஃப்; ஆளுநருடன் முக்கிய சந்திப்பு

21 minutes ago
in செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் குழந்தைகள் மற்றும் சமூகங்களின் நலனுக்காக யுனிசெஃப் முன்னெடுத்து வரும் பணிகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் யுனிசெஃப் இலங்கை பிரதிநிதி எம்மா பிரிகாம் ஆகியோருக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் உரிமைகள் உள்ளிட்ட விடயங்களில் கிழக்கு மாகாணத்தில் யுனிசெஃப் முன்னெடுத்து வரும் பணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருகோணமலையில் இயங்கி வரும் யுனிசெஃப் அலுவலகம் 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனிசெஃபின் உலகளாவிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய உத்திசார் திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அலுவலகம் மூடப்படுவது கிழக்கு மாகாணத்திற்கான யுனிசெஃபின் பணிகள் நிறைவடைவதை குறிக்காது எனவும், மாகாணத்தின் குழந்தைகள் மற்றும் சமூகங்களின் தேவைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் மாகாண நிறுவனங்களுடன் எதிர்காலத்திலும் நெருக்கமான ஒத்துழைப்பை பேணுவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு உரிய நேரத்தில் தீர்வுகளை வழங்குவதற்கான ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம யாத்திரை சென்ற குழுவினரின் பேருந்தை தாக்கிய யானை
செய்திகள்

கதிர்காம யாத்திரை சென்ற குழுவினரின் பேருந்தை தாக்கிய யானை

September 3, 2026
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
செய்திகள்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

September 3, 2026
இந்திய கப்பல் ஏற்றுமதியில் இலங்கைக்கு முக்கிய இடம்; 56.5 மில்லியன் டொலராக உயர்வு!
செய்திகள்

இந்திய கப்பல் ஏற்றுமதியில் இலங்கைக்கு முக்கிய இடம்; 56.5 மில்லியன் டொலராக உயர்வு!

September 3, 2026
இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர் காலமானார்!
செய்திகள்

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர் காலமானார்!

September 3, 2026
ஜே.ஆர், சந்திரிகா, மஹிந்த செய்த அதே வேலையைத்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார்
அரசியல்

ஜே.ஆர், சந்திரிகா, மஹிந்த செய்த அதே வேலையைத்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார்

September 3, 2026
டெங்கு அபாயம் இன்னும் நீங்கவில்லை; சுற்றுச்சூழலில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
செய்திகள்

டெங்கு அபாயம் இன்னும் நீங்கவில்லை; சுற்றுச்சூழலில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

September 3, 2026
Next Post
கதிர்காம யாத்திரை சென்ற குழுவினரின் பேருந்தை தாக்கிய யானை

கதிர்காம யாத்திரை சென்ற குழுவினரின் பேருந்தை தாக்கிய யானை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.