ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 12ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பெரியகல்லாறு மெதடிஸ்த சமூக மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைவி அருட்சகோதரி தயாளினி ஜோன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் யு. உதயசிறீதர் அவர்கள் பிரதான விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
ஆன்மீக அதிதிகளாக கல்லாறு மெதடிஸ்த சேகர முகாமைக்குரு அருட்திரு. செ. திருமறைதாசன், கல்முனை மெதடிஸ்த சேகரத்தைச் சேர்ந்த அருட்செல்வி. அ. சுலோஜினி மற்றும் கோடைமேடு சிவஶ்ரீ. க. வடிவேல் குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆசிகளையும் வாழ்த்துகளையும் வழங்கினர்.
இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையினை எஸ்.கியு.எம்.பவுன்டேசன் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திருமதி தருணி சிவகுமார் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
விழாவில் பல்வேறு தொழிற்பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அரச உத்தியோகஸ்தர்கள், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் பணியாளர்கள், ஆசிரியர்கள், பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்கள், தற்போதைய பயிற்சியாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.













































