முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (04) முற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.








