தொல்பொருட்களைத் தேடி சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேரை ஹிங்குரகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தல்பொத்த பகுதியில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (06) பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது இந்தக் கைதுகள் இடம்பெற்றன.
கைது செய்யப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் புலஸ்திகம பகுதிகளைச் சேர்ந்த 19, 26, 45, 47, 49 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஹிங்குரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







