புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியக அலுவலகத்தில் கடமையாற்றும் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி மட்டக்களப்பில் அமைந்துள்ள அப்பணியக அலுவலகத்திற்குச் சென்ற இவர், அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.







