நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,15,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்களுக்குத் தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக, ஏழு மாவட்டங்களில் உள்ள 34,628 குடும்பங்களைச் சேர்ந்த 1,13,406 பேருக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.








