ரஷ்யாவின் வட காகசஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மற்றொரு 6 பேர் காணாமல் போயுள்ளதாக அவசரகால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மொத்தம் 33 பேரைக் கொண்ட மலையேற்ற வீரர்களின் குழு மிஷிர்ஹி மலையில் ஏறிக்கொண்டிருந்தபோதே, எதிர்பாராதவிதமாக இந்தப் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணாமல்போன 6 பேரைக் கண்டுபிடிக்கும் நோக்கிலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கிலும் 50-க்கும் மேற்பட்ட சீருடை தரித்த மீட்புக் குழுவினரும், ஹெலிகொப்டர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. எனினும், மோசமான காலநிலை மற்றும் மீண்டும் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாகத் தேடுதல் பணியில் பெரும் சவால்கள் நிலவுகின்றன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரஷிய விசாரணை ஆணையம் முன்னெடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








