இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 97,637 டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு தொற்றுக்குள்ளானவர்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, செப்டம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 2,146 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியான தரவுகளின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரை 20,742 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 19,235 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,291 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,247 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வரும் நிலையில், பொதுமக்கள் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதில் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.








