Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“தமிழ் பொது வேட்பாளருக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்தி பொய்”; ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவிப்பு!

“தமிழ் பொது வேட்பாளருக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்தி பொய்”; ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் பொது வேட்பாளருக்கு மட்டு ஆயர் பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி மற்றும் நாடாளுமன்ற உறப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரை தவறாக நான் பேசியதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் நான் தெரிவிக்கவில்லை எனவும், ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாக, திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்ட விடயத்தை தான் எச்சரிப்பதாகவும் ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி முதியோர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே, ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் ஓய்வு பெற்று தங்கியிருக்கம் நிலையில் என்னை பலர் வந்து சந்தித்துச் செல்கின்றனர் இந்த நிலையில் சில ஊடகவியலாளர்களும் வந்து சந்தித்து சென்றவர்கள்.

இந்த நிலையில் நான் நா.உறுப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியனுக்கும் எதிராகவும் மற்றும் தமிழ் பொது வேட்பாளருக்கு பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தவறாக திரிவுபடுத்தி என்னையும் குழப்பி அவர்களும் குழம்பியுள்ளனர்.

எனவே நான் அவ்வாறு எதுவும் தெரிவிக்கவில்லை. நான் சொல்ல விரும்புவது “இது தான் எமது நாட்டில் சுதந்திரம் வேண்டும், எல்லோரும் சுதந்திரமாகவும் புத்தி வேராகவும், எல்லோரும் சமாதானமாகவும் வாழவேண்டும். அதற்காக யார் யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமே அவர்களுக்கு அதரவு தெரிவிக்கவும். முடியாதவர்கள் பேசாமல் விடுங்கள்” என்றேன் என நான் சொன்னதை சிலபேர் அதனை திரிவுபடுத்தி முரன்பாடாக பொய் சொல்லியுள்ளனர்.

எனக்கு விருப்பம் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும், சமாதானமாகவும் எப்படி வாழவேண்டுமே அப்படி எல்லாம் வாழவேண்டும். அதனை தவறாக புரிந்து கொண்டு திரிவுபடுத்தி எனக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளனர்.

Sri Lanka's Tamil parties announce common candidate for presidential poll

தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாழவேண்டும் எனது விருப்பம் அதனை அன்றும் வலியுறுத்தினேன் இன்றும் அதனை வலியுறுத்துகின்றேன். எனவே பொய் வதந்திகளை பிரச்சாரங்களை நம்பவேண்டாம்.

நான் சொல்லவும் இல்லை, விரும்பவும் இல்லை தமிழ் மக்கள் விருப்பம் அதற்காக பாடுபடவேண்டும் என்பது எனது விருப்பம் அதனை நிறைவேற்ற தான் குருவாக, ஆயராக இறைவன் என்னை தோர்ந்து எடுத்துள்ளார்.

நான் ஓய்வு பெற்றாலும் எனது நோக்கம் எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டும். அதனை விடுத்து ஒருவருக்கு ஒருவர் பிரச்சாரம் செய்து பொய்யாக சொல்லி தவறான வழியில் முன்னெடுப்பதை நான் விரும்பவில்லை அதனை எச்சரிக்கின்றேன் எதிர்க்கின்றேன். என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
யூடியூப் தளத்திலும் சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

யூடியூப் தளத்திலும் சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.