ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சியும், கோமெயிட்டோ கூட்டணியும் ஆட்சியமைத்து வருகிறது. இந்நிலையில், பாராளுமன்றத்தில் செனட் சபைக்கு ஞாயிற்றுக்கிழமை (20) அன்று தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆளும்கட்சியின் பின்னடைவால் பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகஸ்ட் மாதம் பதவி விலகவிருப்பதாக அறிவித்துள்ளதாக பிரபல செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், ஆளும் கூட்டணியின் எதிர்ப்பையும் மீறி ஆட்சியில் நீடிக்க சபதம் செய்துள்ள இஷிபாவுக்கு அவரது லிபரல் ஜனநாயகக் கட்சியிலேயே எதிர்ப்பு வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








