Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கதவடைப்பு போராட்டத்திற்கு ஜீவன் மற்றும் மனோ கணேசன் ஆதரவு

கதவடைப்பு போராட்டத்திற்கு ஜீவன் மற்றும் மனோ கணேசன் ஆதரவு

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக மேற்கொள்ளப்படும் ‘கதவடைப்பு’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் 2025 எதிர்வரும் 15ம் திகதி, வெள்ளிக்கிழமை ‘கதவடைப்பு’ போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘கடந்த 7 ஆம் திகதியன்று, முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர், இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டு வந்தார். பின்னர் கடந்த சனிக்கிழமை (09) அன்று, அவரது சடலம் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.

நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு, எனது ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துகின்றேன்.

யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்துகின்றேன்.’என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் “நீதியான விசாரணை”, “வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம் என தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?
செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?

June 19, 2026
தனக்கு போடப்பட்ட செருப்பு மாலையுடன் கூடிய பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா!
செய்திகள்

தனக்கு போடப்பட்ட செருப்பு மாலையுடன் கூடிய பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா!

June 19, 2026
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!
செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!

June 19, 2026
இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!
செய்திகள்

இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!

June 19, 2026
இனவாத சக்திகளுக்கு முஸ்லிம் ஊடக பிரதிநிதிகள் துணை என்ற குற்றச்சாட்டுக்கு வலுக்கும் கண்டனம்
செய்திகள்

இனவாத சக்திகளுக்கு முஸ்லிம் ஊடக பிரதிநிதிகள் துணை என்ற குற்றச்சாட்டுக்கு வலுக்கும் கண்டனம்

June 19, 2026
அமெரிக்கா–ஈரான் முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில்
உலக செய்திகள்

அமெரிக்கா–ஈரான் முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில்

June 19, 2026
Next Post
மட்டக்களப்பில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.