Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நல்லூர் உற்சவங்களில் 600 பொலிஸார் கடமையில்; திருடர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு

நல்லூர் உற்சவங்களில் 600 பொலிஸார் கடமையில்; திருடர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நல்லூர் ஆலய விசேட உற்சவங்களில் 600 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏபிஎஸ் ஜெயமகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் எதிர்வரும் வாரம் நல்லூர் ஆலயத்தில் தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா உள்ளிட்ட விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளதால் பெருமளவான பக்தர்கள் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் திருட்டுக்களை தடுக்கும் முகமாகவும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து விசேட பொலிஸ் அணியினர் நல்லூர் ஆலய பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய சிவில் மற்றும் சீருடையில் சுமார் 600 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு தென்பகுதி மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து திருட்டுடன் தொடர்புடைய பல்வேறு சந்தேக நபர்களை இனங்காணக்கூடிய பொலிஸ் அணியொன்றும் நல்லூர் ஆலய உற்சவத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஏற்கனவே பல திருட்டு சம்பவங்களும் தொடர்புடையவர்கள் தொடர்பிலான புகைப்படங்களையும் ஆலய நுழைவாயில்களில் காட்சிப்படுத்தவுள்ளனர்.

புகைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டவர்கள் யாராவது ஆலய வளாகத்தில் இனம் காணப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவதன் மூலம் விரைவில் அவர்களைக் கைது செய்யக் கூடியதாக இருக்கும்.

எனவே பொலிஸாரால் பல்வேறுபட்ட வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் பொதுமக்கள் குறித்த விடயத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!
செய்திகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!

June 19, 2026
நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு
செய்திகள்

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு

June 19, 2026
கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
செய்திகள்

கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

June 19, 2026
எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்
செய்திகள்

எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்

June 19, 2026
அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு
செய்திகள்

அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு

June 19, 2026
Next Post
மடுமாதா தேவாலய வருடாந்திர திருவிழா இன்று ஆரம்பம்

மடுமாதா தேவாலய வருடாந்திர திருவிழா இன்று ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.