Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறுதி கட்டத்தை நோக்கி நகரும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

இறுதி கட்டத்தை நோக்கி நகரும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, நீதியமைச்சில் கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. குழுவின் தலைவர் ஜனாதிபதி வழக்கறிஞர் ரியன்சி அர்சகுலரத்ன, தொடர்புடைய சட்ட வரைவை விரைவில் இறுதி செய்ய முடியும் என்று கூறினார்.

இந்தக் கலந்துரையாடலில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நெரின் புல்லே, சிரேஷ்ட பிரதி பொலிஸ் ஆய்வாளர் அசங்க கரவிட்ட, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மேலதிக செயலாளர் (சட்டம்) பியமுந்தி பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் சட்ட அதிகாரிகள், மேஜர் ஜெனரல் சந்துன் குணவர்தன, லெப்டினன்ட் கேணல் கே.என்.எஸ். மெண்டிஸ் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து இதில்,கொண்டனர்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தயாரிப்தற்கான இந்த குழு, இதுவரை 14 முறை கூடியுள்ளது. இக்குழுவின் அடுத்த கூட்டம் நாளை வௌ்ளிக்கிழமை (22) நடைபெறவுள்ளது. இந்த சட்ட மூபம் வரைவு தொடர்பில் பொதுமக்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களிடமிருந்தும் கருத்துக்கள் கோரப்பட்டன.

நாட்டில் நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை, இரத்து செய்து புதிய சட்டத்தை வரைவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், அமைச்சரவையின் ஒப்புதலுடன் ஒரு நிபுணர் குழுவை நியமித்தார். புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவது, நவீன உலகளாவிய பயங்கரவாத சவால்களை நிவர்த்தி செய்வதையும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனிநபர்களின் மனித உரிமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதையும், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிலைகளுக்கு இணங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இப்புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது.

Tags: Battinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு
அரசியல்

“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு

June 8, 2026
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!
செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!

June 8, 2026
மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்
செய்திகள்

மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்

June 8, 2026
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!

June 8, 2026
மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்
செய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்

June 8, 2026
பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

June 8, 2026
Next Post
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.