Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறுதி கட்டத்தை நோக்கி நகரும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

இறுதி கட்டத்தை நோக்கி நகரும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, நீதியமைச்சில் கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. குழுவின் தலைவர் ஜனாதிபதி வழக்கறிஞர் ரியன்சி அர்சகுலரத்ன, தொடர்புடைய சட்ட வரைவை விரைவில் இறுதி செய்ய முடியும் என்று கூறினார்.

இந்தக் கலந்துரையாடலில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நெரின் புல்லே, சிரேஷ்ட பிரதி பொலிஸ் ஆய்வாளர் அசங்க கரவிட்ட, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மேலதிக செயலாளர் (சட்டம்) பியமுந்தி பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் சட்ட அதிகாரிகள், மேஜர் ஜெனரல் சந்துன் குணவர்தன, லெப்டினன்ட் கேணல் கே.என்.எஸ். மெண்டிஸ் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து இதில்,கொண்டனர்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தயாரிப்தற்கான இந்த குழு, இதுவரை 14 முறை கூடியுள்ளது. இக்குழுவின் அடுத்த கூட்டம் நாளை வௌ்ளிக்கிழமை (22) நடைபெறவுள்ளது. இந்த சட்ட மூபம் வரைவு தொடர்பில் பொதுமக்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களிடமிருந்தும் கருத்துக்கள் கோரப்பட்டன.

நாட்டில் நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை, இரத்து செய்து புதிய சட்டத்தை வரைவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், அமைச்சரவையின் ஒப்புதலுடன் ஒரு நிபுணர் குழுவை நியமித்தார். புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவது, நவீன உலகளாவிய பயங்கரவாத சவால்களை நிவர்த்தி செய்வதையும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனிநபர்களின் மனித உரிமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதையும், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிலைகளுக்கு இணங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இப்புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது.

Tags: Battinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
Next Post
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.