மட்டக்களப்பு கோட்டமுனை பாலத்தின் அருகில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.
விபத்தில் தொடர்புடைய வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் கார் இந்த விபத்தில் சிக்குண்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








