Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்ஸ்டா மூலம் பழக்கம்; இளைஞனின் மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்த இளம்பெண்

இன்ஸ்டா மூலம் பழக்கம்; இளைஞனின் மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்த இளம்பெண்

9 months ago
in உலக செய்திகள், செய்திகள்

இன்ஸ்டா மூலம் பழகிய நபரை வீட்டுக்கு வரவழைத்து அவருடைய மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின்களை அடித்து கொடூரம் நிகழ்த்தியதாக இளம்பெண் மற்றும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சரல்குன்னு பகுதியில் வசித்து வருபவர் ரஷ்மி வயது 23. இவருடைய கணவர் ஜெயேஷ் வயது 29 சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்த ரஷ்மிக்கு ஆலப்புழை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களுடைய பழக்கம் முறையற்ற தொடர்பாக மாறிய நிலையில் அந்த வாலிபரை ரஷ்மி தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

ரஷ்மியின் அழைப்பை தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி அவருடைய வீட்டிற்கு அந்த இளைஞர் வந்துள்ளார். அப்போது இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது திடீரென அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ் செல்போனில் இருவரும் உல்லாசமாக இருப்பதை படம் பிடித்துள்ளார். அதன் பின்னரே ரஷ்மியின் உண்மை முகம் அந்த இளைஞருக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ரஷ்மியும் அவருடைய கணவர் ஜெயேஷும் சேர்ந்து அந்த இளைஞரை கொடூரமாக தாக்கி அவரிடம் இருந்து விலையுயர்ந்த மொபைல் போன் மற்றும் 6,000 ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.

பின்னர் அந்த இளைஞரின் இரு கைகளையும் கட்டி தொங்கவிட்டு இருவரும் சேர்ந்து அவருடைய மர்ம உறுப்பில் 26 ஸ்டேப்ளர் பின்களை அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். இளைஞரின் கை விரல் நகங்களையும் பிடுங்கி வீசி உள்ளனர். இறுதியாக இளைஞரை இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர். இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து ஆரன்முளா காவல்துறையினர் சிகிச்சைபெற்று வரும் அந்த இளைஞரிடம் நடந்தது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனக்கு நடந்த கொடூரங்களை அந்த இளைஞர் தெரிவித்த நிலையில் இதற்கு காரணமான ரஷ்மி மற்றும் அவருடைய கணவர் ஜெயேஷை பொலிசார் கைது செய்தனர். இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரஷ்மி சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இளைஞர்களிடம் பழகி ஆசை வார்த்தை கூறி வரவழைத்து பணம் பறிப்பது வாடிக்கையாக இருந்தது தெரிய வந்துள்ளது.

கடந்த ஐந்தாம் தேதி ஓணம் திருவிழாவின் போதும் ரான்னி பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை இதேபோல சமூக வலைத்தளம் பக்கம் மூலம் பேசி பழகி வரவழைத்து பணம் பறித்ததோடு அவரையும் இதேபோல கொடூரமாக சித்திரவதை செய்து பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேசமயம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த குரூர தம்பதியின் கொடுமை.

Tags: BattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

June 7, 2026
சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை
செய்திகள்

சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை

June 7, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
Next Post
சதீஷ் கமகேவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

சதீஷ் கமகேவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.