மட்டக்களப்பு வெப்பர் மைதானத்தில், அருட்தந்தை கிளமண்ட் அண்ணதாஸ் அவர்களின் ஆசீர்வாதத்துடன் 12வது மாபெரும் 20/20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2025 சனிக்கிழமை (21) காலை ஆரம்பமானது.
போட்டியின் தொடக்க ஆட்டத்தில், புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை மற்றும் வின்சென்ட் தேசிய மகளிர் பாடசாலை அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வின்சென்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிசிலியா அணி, 18வது ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்தபோதும் 104 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்று 2025ஆம் ஆண்டிற்கான சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
அமோரிட்டா அகஸ்டின் 28 பந்துகளில் 39 ஓட்டங்களை (5 சிக்ஸர்களுடன்) சேர்த்ததற்காக போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை விருதைப் பெற்றார்.
அதேசமயம் இப்போட்டியை காண மாணவிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் திரளாக கலந்து கொண்டிருந்தனர்.









