வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரனின் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணையில், மூவர் இன்று ( 26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை கெகிராவ பிரதேசத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் இருக்கிறார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்னும் தொடர்கின்றன.








