Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாம்பு தீண்டிய நிலையிலும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மாணவன் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் எழுதிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் இன்று (21) இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று இரசாயனவியல் பாடப் பரீட்சை நடைபெற்றது. இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்குச் சென்ற துஸ்யந்தன் சாத்வீகன் என்ற மாணவன் பாடசாலை வளாகத்தினுள் நுழைந்தபோது பாம்பு தீண்டியுள்ளது.

ஆரம்பத்தில் அதனைப் பொருட்படுத்தாத மாணவன், பரீட்சை மண்டபத்திற்குச் சென்று அமர்ந்துள்ளார். எனினும், பாம்பு தீண்டிய இடத்தில் குருதிப் பெருக்கு ஏற்பட்டதை அவதானித்த நிலையில், விடயம் உடனடியாக பரீட்சை மேற்பார்வையாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

உடனடியாகச் செயற்பட்ட அதிகாரிகள் நோயாளர் காவு வண்டி மூலம் மாணவனைப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

சிகிச்சையின் பின்னர், மீண்டும் நோயாளர் காவு வண்டியில் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்ட மாணவன், வைத்தியர்களின் கண்காணிப்புடன் தனது பரீட்சையைத் தொடர்ந்து எழுதியுள்ளார். பரீட்சை நிறைவடைந்த பின்னர், அவர் மீண்டும் மேலதிக சிகிச்சைகளுக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாளை (22) நடைபெறவுள்ள பரீட்சைக்கும் குறித்த மாணவன் வைத்தியசாலையிலிருந்து நோயாளர் காவு வண்டி மூலமாகவே பரீட்சை நிலையத்திற்கு அழைத்து வரப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் உபாதைக்கு மத்தியிலும் கல்வியில் அவர் காட்டிய இந்த ஈடுபாடு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
Next Post
களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் கைது

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.