Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு கிழக்கில் மலையக மக்களை குடியேற்ற ஈரோஸ் தயார்; இரா.பிரபாகரன் தெரிவிப்பு

வடக்கு கிழக்கில் மலையக மக்களை குடியேற்ற ஈரோஸ் தயார்; இரா.பிரபாகரன் தெரிவிப்பு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

.வடக்கு கிழக்கில் மலையக மக்களை குடியேற்ற ஈரோஸ் கட்சி தயாராக உள்ளது அதேவேளை இன்று ஒரு அனர்த்தம் ஏற்பட்டதும் முன்வந்து உதவியது இந்தியா தான். எனவே இந்தியாவுக்கு எதிராக கதைப்பதற்கு எவருக்கும் அருகதை இல்லை. என ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை பூராகவும் மக்களின் அவல ஓலம் கேட்கலாம் , தற்போது நல்லதொரு அரசாங்கம் இருப்பதால், உலக நாடுகள் முழுவதும் எமது நாட்டிற்காக உதவ முன்வந்துள்ளதுடன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தமது உதவிகளை முன்வந்து வழங்க ஆரம்பித்துவிட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாராளுமன்றத்தில் கடந்த முறை நூடில்ஸ் வேண்டிய பணத்தை வழங்கவில்லை என்கிறார் இவருக்கு வெட்கமில்லையா இதை சொல்வதற்கு. ஈரோஸ் வடகிழக்கு உள்ளிட்ட மலையக மக்களின் வறுமையை போக்கியிருக்கின்றது.

செந்தில் தொண்டமான், ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் இந்த மலையக மக்களுக்கு எதனை செய்துள்ளார்கள். 1985 ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தை ஊடாக மலையக மக்களுக்கு பிரஜா உரிமையை பெற்றுக் கொடுத்தது கூட ஈரோஸ் இவர்கள் இந்த மக்களுக்கு ஒரு இறாத்தல் பாண் கூட பெற்றுக் கொடுக்கவில்லை.

கிழக்கு மாகாண ஆளுனராக இருந்த செந்தில் தொண்டமான் 500 கிலோ கிராம் கஜு சாப்பிட்டுள்ளார். ஒரு கிலோ 6000 ஆயிரம் ரூபாய் அப்படியானால், ஒரு வருடத்திற்கு எவ்வளவு செலவு செய்து கஜு சாப்பிட்டிருப்பார். இந்த பணத்தில் மலையக மக்களுக்கு பாண் வேண்டி கொடுத்திருக்கலாம்.

ஜனாதிபதி அனுர நல்லதொரு போராளி, நீங்களும் இந்த மலையக மக்களுக்கு துரோகம் செய்யாது. மலையக மக்கள் வாழ முடியாத இடங்களில் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் வடகிழக்கில் குடியேற்றலாம் அது தொடர்பில் அரசாங்கம் சிந்தியுங்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய கட்சிதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆனால் இதில் இருந்த 16 பேரும் எதை எமது மக்களுக்கு செய்துள்ளார்கள்.

இன்று பார்த்தால் பிள்ளையான், டக்ளஸ் செய்ததை கூட இந்த தமிழ் அரசியல்வாதிகள் எதையும் செய்யவில்லை. அரகர போராட்டம் நடக்கும் போது நாட்டை பொறுப்பெருக்க முன்வந்தவர்கள், இன்று அனுர அரசை புடுங்க முயல்கின்றனர். நான் இன்று கூறுகின்றேன் 10 வருடங்களுக்கு இந்த அனுர அரசை யாராலும் புடுங்க முடியாது.

புலம்பெயர் சமூகம் மலையக மற்றும் வடகிழக்கு மக்களுக்கு உதவி செய்ய விரும்பினால் எமது தொலைபேசி இலக்கமாகிய 0771433317 உடன் தொடர்பு கொண்டு உதவலாம்,

இந்தியா இன்று பாரிய உதவி செய்து வருகிறது. வடக்கு கிழக்கு, மலையக மக்கள் சார்பாக நன்றியை தெரிவிக்கிறோம் என ஈரோஸ் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வாழைச்சேனை பிரதேசம் முழுவதும் நிவாரணம் சேகரிப்பு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வாழைச்சேனை பிரதேசம் முழுவதும் நிவாரணம் சேகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.