Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறக்காமம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை

இறக்காமம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை

7 months ago
in செய்திகள்

இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்போது நிலவி வரும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்களை இந்த ஆண்டுக்குள் நிரப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் கே.எல். சமீம் தெரிவித்துள்ளார்.

இறக்காமம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மஹ்மூட் லெப்பையுடன் இறக்காமம் பிரதேச சபை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது, கோட்டக் கல்விப் பணிப்பாளர் மஹ்மூட் லெப்பை, ஆசிரியர் ஆளணி நிலவரம் தொடர்பான ஒரு அறிக்கையையும் உப தவிசாளர் கே. எல். சமீமிடம் வழங்கினார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், இறக்காமம் கல்விக் கோட்டத்தின் 12 பாடசாலைகளுக்காக 2025 ஆம் ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் ஆளணி எண்ணிக்கை 313 ஆகும். எனினும், தற்போது 283 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதால், மேலும் 30 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் குறிப்பிட்ட உப தவிசாளர் கே. எல். சமீம், மீதமுள்ள 30 ஆசிரியர் வெற்றிடங்களையும் இந்த ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததாக தெரிவித்தார்.

இறக்காமம் கல்விக் கோட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியில் சிரமதானம்

கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியில் சிரமதானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.