கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் கலை விழாவும் பிரிவுபசார வைபவமும் இன்று மாலை கிரான் மத்திய கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் கலை–கலாச்சார நிகழ்வுகளுடன் நடைபெற்றது.
நிகழ்வு, அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றம், இறை வணக்கம், தேசிய கீதம், தமிழ் மொழி வாழ்த்து ஆகியவற்றுடன் ஆரம்பமானது. மாணவர்களின் வரவேற்பு நடனம் நிகழ்வுக்கு அழகூட்டியது.
அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் அதிபர் திருமதி V. ரவிக்குமார் தலைமையுரையாற்றினார். நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் சிறப்புரைகள் நிகழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். முதலாம் ஆண்டிற்கு செல்லும் மாணவர்களும், அத்துடன் 2024–2025 கல்வியாண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற முன்னாள் மாணவர்களும் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக V. முரளிதரன் (மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்) கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக சிவஸ்ரீ பி. கஜரூபன் சர்மா, கிரான் பிரதேச பாடசாலை அதிபர்களான S. செல்வசுதேசன், S. இளங்கோவன், N. பிரதீபன், ஓய்வு பெற்ற அதிபர் P.J.J. ஜெயவீரரெட்னம் ஆகியோரும்,
சிறப்பு அதிதிகளாக சட்டத்தரணி K. புருசோத்மன் மற்றும் முன்பள்ளி பருவ வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி V. கயல்விழி ஆகியோரும் கலந்துகொண்டனர்.




















