மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் பகுதியில் ஏழைக் குடும்பம் ஒன்றின் வீடு திடிரென தீப்பிடித்து எரிந்ததால் குடும்பம் ஒன்று செய்வதறியாது தவிக்கிறது.
திடிரென தீப்பிடித்து எரிந்ததால் போட்டிருந்த உடைகளை தவிர வேறு எந்த பொருட்களும் இன்றி குறித்த குடும்பம் செய்வதறியாது தவிர்த்து வருகிறது.
தற்காலிகமாக உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்வையிட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான நிலாந்தன் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டதோடு வீடு இன்றி தவிக்கும் குடும்பத்திற்கு வீடு ஒன்றை அமைத்து கொடுப்பதற்கு புலம்பெயர் உறவுகள், தொண்டு நிறுவனங்கள் முன் வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முறைப்பாடு செய்தும் ஏறாவூர் பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என குற்றம் சாட்டிய பிரதேச சபை உறுப்பினர். வீதி முறையாக போடப்படாமையால் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வரமுடியாமல் போனதால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியதாக அவர் தெரிவித்தார்.










சிறுக சிறுக சேமித்த கட்டிய சிறிய வீடு மற்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து நாகமாகியதால் குறித்த குடும்பம் செய்வதாறியாது தவிக்கின்றது. குறித்த குடும்பத்திற்கான உதவிகளை செய்வதற்கு முன் வருமாறு கோரிக்கை விடுத்தனர்.








