Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
13 ஆண்டுகள் கல்வி கற்காமல் பாடசாலையை விட்டு வெளியேற முடியாது; அநுர அறிவிப்பு

13 ஆண்டுகள் கல்வி கற்காமல் பாடசாலையை விட்டு வெளியேற முடியாது; அநுர அறிவிப்பு

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் 38,000 மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ள முன்பே பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பிள்ளைக்கும் 13 ஆண்டுகள் கட்டாயக் கல்வியை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் 13 ஆண்டுகள் கல்வி கற்காமல் ஒரு பிள்ளை கூட பாடசாலையை விட்டு வெளியேற முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (27) கம்பளையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கிராமப்புற வறுமையை ஒழிப்பதில், கல்விக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தம் நமக்குத் தேவை. கிராமப்புற மக்களை சுழற்சி வறுமையிலிருந்து விடுவிப்பதற்கான முக்கிய வழி கல்விதான். அதனால் நாங்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

38,000 மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ள முன்பே பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள். சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் சுமார் 74 சதவீதமானோர் 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்காதவர்கள்.

அவர்கள் குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களில் தொடர்புபட்டுள்ளனர். எனவே, சாதாரண தரப் பரீட்சைக்கு முன்பே பாடசாலையை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும்.

சாதாரண தரப் பரீட்சைக்குப் பிறகு, அவர்களில் பெரும்பாலோர் பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள். சிலர் க.பொ.த உயர் தரத்திற்குத் தோற்றுகிறார்கள், அதில் சித்திபெற்ற பிறகு, ஒரு குழு பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறது.

அதுதான் நம் நாட்டின் கல்விப் பாதை. ஆனால் நாங்கள் தேர்ந்தெடுத்த கல்விப் பாதை அதுவல்ல. ஒவ்வொரு பிள்ளைக்கும் 13 ஆண்டுகள் கட்டாயக் கல்வியை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு.

இன்று நாங்கள் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். பிள்ளை பாடசாலைக்கு வரவில்லை என்றால், பிள்ளை பாடசாலைக்கு வரவில்லை என்று பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன்படி, பிரதேச செயலக மட்டத்தில் அதிகாரிகள் குழு நியமிக்கப்படும்.

எனவே, இந்த கல்வி சீர்திருத்தங்களின் நோக்கங்களில் ஒன்று கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதாகும். இன்றைய சமூகத்தில் உள்ள அனைத்து மனித உறவுகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சி கண்டுவிட்டன.

நமக்கு சிறந்த மனித உறவுகள் கொண்ட ஒரு சமூகம் தேவை. அரச அதிகாரிக்கும் சேவைகளைப் பெற வரும் மக்களுக்கும் இடையிலான உறவு, மகா சங்கத்தினருக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு, பாடசாலை ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு இந்த உறவுகள் அனைத்தும் இன்று பல சவால்களைச் சந்திக்கின்றன.

இந்த நாட்டை சமூக ரீதியாக கட்டியெழுப்ப, இந்த சிறந்த உறவுகள் அனைத்தும் மீண்டும் பேணப்பட வேண்டும். இந்த விடயத்தில், மகா சங்கத்தினருக்கும் மதத் தலைவர்களுக்கும் உள்ள பங்கு மிகவும் மகத்தானது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
யாழில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்ட இராணுவப்சிப்பாய்

யாழில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்ட இராணுவப்சிப்பாய்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.