நுவரெலியா – நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அன்பழகன் நிக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுவரெலியா கிரிகோரி வாவியிலிருந்து வெளியேறி கொத்மலை ஆற்றுடன் சங்கமிக்கும் நானுஓயா ஆற்றுப் பகுதியில் உள்ள கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் இவர்கள் நீராடச் சென்றிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








