யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிணற்றுக்குள் பெருமளவான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிணற்றுக்குள் காணப்படும் வெடிபொருட்களை பாதுகாப்பான முறையில் மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
வெடிபொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








