“தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரனும், சிவஞானமுமே தவிர சிறிதரன் அல்ல” என சிவசேனை அமைப்பின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் கடந்த (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துரைத்த அவர், 2025 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழரசுக் கட்சியிலிருந்து பலர் நீக்கப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பில் அரியநேந்திரன், கொழும்பில் தவராசா, யாழ்ப்பாணத்தில் சரவணபவன், மானிப்பாயில் அனந்தி சசிதரன், மன்னாரில் சிவகரன் எனப் பட்டியல் நீள்கிறது.
மலட்டுத்தன்மை உடைய கட்சியாக தமிழரசுக் கட்சியை மாற்றுவதே சுமந்திரனுடைய நோக்கமாக இருக்கிறது” – என்றார்.








