கல்குடா கல்வி வலயம் வாழைச்சேனை இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம்-1 மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று (29) வித்தியாலய அதிபர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித்தின் தலைமையில் நடைபெற்றது.
“மகிழ்ச்சி, புன்னகை,மற்றும் அன்புடன் பாடசாலைக்கு பேரன்புக்குரிய குழந்தைகளை வரவேற்கிறோம்”
என்ற தொனிப் பொருளில் இவ் தேசிய நிகழ்வு பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய நிகழ்வின்போது அதிதிகள் மற்றும் தரம் ஒன்று மாணவர்கள் சிரேஷ்ட மாணவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாண்டு வாத்திய இசை நிகழ்வுடன் ஊர்வலமாக விழா மண்டபத்துக்கு அழைத்து வரவேற்கப்பட்டனர்.
புதிய மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் முகமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கில் அரங்கேற்றப்பட்டது.








நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலய கல்வி அபிவிருத்திக்கான பிரதி கல்விப் பணிப்பாளர் என்.நேசகஜேந்திரன் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளருமான அ.ஜெயக்குமாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதிகளாக ஆரம்ப கல்வி பிரதி கல்வி பணிப்பாளர் தயாள குணசீலன் ,சேவைக்கால ஆலோசகர் தயாகரன் ,இந்து கல்லூரி அதிபர் கமல சேகரன் ,ஆரம்பக் கல்வி ஆலோசகர் திருமதி அருளேந்திரன் மற்றும் கிராம சேவகர் சுபோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வித்தியாலய அதிபர் திருமதி ஷோபா ஜெய ரஞ்சித்தினால் பிரதமர் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினிஅமரசூரிய அவர்களது வாழ்த்து செய்தியும் வாசிக்கப்பட்டது.








