ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் அமைக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் நூலகம் மற்றும் KMS ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம் நூரி அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, நூலகத்தையும் ஸ்மார்ட் வகுப்பறையையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
அவ்விழாவில் உரையாற்றிய அவர், அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் மார்க்கக் கல்வியுடன் இணைந்து தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழித் திறன் போன்ற நவீன அறிவுத் துறைகளிலும் தேர்ச்சி பெறுவது காலத்தின் தேவை என வலியுறுத்தினார்.
மேலும், திறந்து வைக்கப்பட்ட “ஹிஸ்புல்லாஹ் நூலகம்” பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தந்தையின் பெயரில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.













