Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டத்தரணி படுகொலை விசாரணைகள் தீவிரம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

சட்டத்தரணி படுகொலை விசாரணைகள் தீவிரம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

4 months ago
in செய்திகள்

சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் தான் பதவி விலகப்போவதில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள பதவி விலகல் கோரிக்கை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சட்டத்தரணி ஒருவரது படுகொலை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டவுடன், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தற்போதைய நிலையில், உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தியவர்களே இன்று எம் மீது அத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.

எமது ஆட்சியில் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றிச் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுகின்றன. இந்த விசாரணைகளின் முடிவில் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது நாட்டுக்குத் தெரியவரும்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது அரசின் முதன்மைப் பொறுப்பு. பழைய அரசியல் கலாசாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காகவோ அல்லது அரசியல் இலாபம் தேடும் கோரிக்கைகளுக்காகவோ நான் பதவி விலகப்போவதில்லை.

சட்டத்தரணிகள் உட்பட அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. – என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
ஜப்பானில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

ஜப்பானில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.