எம்.ஜி.ஏ. நாஸர் அவர்களின் 33 ஆண்டுகால ஊடகப் பணியைப் பாராட்டி, “ஊடக ஒளிச்சுடர்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் 3ஏ சனசமூக நிலையத்தினால் நடத்தப்பட்டது.
சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.எஸ்.எம். றூமி தலைமையில், அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரும், கிழக்கு மாகாண உள்ளூராட்சி பதில் ஆணையாளருமான ஏ.எல்.எம். அஸ்மி, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிகாறா மௌஜூத், மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஆர்.எப். றிப்கா மற்றும் ஏறாவூர் நகர முதல்வர் எம்.எஸ். நழீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








