மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி (MBBS) அவர்கள் நேற்று (20) காலமானார்.
காரைதீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு அரசடியை வசிப்பிடமாகவும் கொண்ட அவர், உடல்நலக்குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்குப் பல்கலைக்கழகம் மருத்துவ பீடத்தில் மருத்துவக் கல்வியை நிறைவு செய்த அவர்,நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவமனையில் தனது பணியை ஆரம்பித்தார். பின்னர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சேவையாற்றி வந்தார்.
அவரது திடீர் மறைவு மருத்துவத் துறைக்கும், அவர் சேவையாற்றிய மக்களுக்கும் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
அதேசமயம் குறித்த வைத்தியர் தற்கொலை செய்ததாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவிவருவதாக அவரது குடும்மத்தினர் கவலை தெரிவித்ததுடன் குறித்த வைத்தியரின் உடற்கூற்று பரிசோதனையில் உணவு விசமாதத்தினாலேயே அவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








