Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரு நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கும் இலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று

இரு நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கும் இலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று

6 months ago
in செய்திகள், விளையாட்டு

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளை நிறைவு செய்யும் வகையில், போட்டியை நடத்தும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (28) இரவு 7.00 மணிக்கு பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்திடம் நேற்று (27) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்ததையடுத்து, இரண்டாவது குழுவிலிருந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணியைத் தீர்மானிப்பதில் இப்போட்டி மிகவும் தீர்மானமிக்கதாக மாறியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை இது ஒரு ஆறுதல் வெற்றியாக அமைந்தாலும், இப்போட்டியின் முடிவே பாகிஸ்தான் அல்லது நியூசிலாந்து அணிகளின் இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும்.

தற்போதைய நிலவரப்படி, புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை அண்மித்துள்ளது.

அதன்படி, நியூசிலாந்தை முந்தி பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமாயின், அவர்கள் இன்று முதலில் துடுப்பெடுத்தாடினால் இலங்கைக்கு எதிராக குறைந்தது 64 ஓட்டங்களினால் வெற்றி பெற வேண்டும்.

அவ்வாறின்றி இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடினால், இலங்கை நிர்ணயிக்கும் இலக்கை அதிகபட்சம் 13.1 ஓவர்களுக்குள் பாகிஸ்தான் எட்ட வேண்டும்.

பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றால், அரையிறுதிப் போட்டியும் இலங்கையில் நடைபெறும். அவ்வாறு இல்லையெனில், இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையில் நடைபெறும் இறுதிப் போட்டியாக இன்றைய போட்டி அமையும்.

இலங்கை – பாகிஸ்தான் இருபதுக்கு 20 போட்டி வரலாறு 19 ஆண்டுகளைக் கொண்டதுடன், இதுவரை இரு நாடுகளுக்கும் இடையில் 29 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இதில் இலங்கை 12 வெற்றிகளைப் பெற்றுள்ள அதேவேளை, பாகிஸ்தான் 17 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் இலங்கையில் 8 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

அதில் இலங்கை 3 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளதுடன், 5 போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக திறமையின் அடிப்படையில் பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது.

எனினும், இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர்களில் ஐந்து முறை இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளன.

2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இரு அணிகளும் உலகக் கிண்ணத் தொடரில் மோதிக்கொள்ளவில்லை. அதன்படி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று உலகக் கிண்ணப் போட்டியில் இவை நேருக்கு நேர் மோதவுள்ளன.

இதேவேளை, இலங்கை அணியில் இன்று ஒரு மாற்றம் ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் காயமடைந்த குசல் மெண்டிஸ் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.

இதனால் கமில் மிஷார விக்கெட் காப்பாளராக மீண்டும் அணியில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
Next Post
சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்

சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.