வரலாற்று சிறப்பு மிக்க பொங்கல் விழா நேற்று (07) கோயில் போரதீவு உதயதாரகை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை முன்பள்ளி ஆசிரிய சங்கமும் மட்டக்களப்பு கிளை போரதீவுப்பற்று பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
48 பொங்கல் பானை வைத்து 120 முன்பள்ளி ஆசிரியர்களின் பங்கு பற்றலுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு,
மரபுரீதியாக வயலில் அறுவடை செய்த நெற்கதிரை மகளீர் இணைந்து கையால் குத்தி, புத்தரிசியாக்கி புதுப்பாணையில் இட்டு பொங்கல் இட்டு மகிழ்ந்தனர்.













அத்துடன் முன்பள்ளி மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கை அலங்காரித்தன, அறிஞர்கள் பலர் சிறப்புரையாற்றினார்கள்.
அதிதிகளாக போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் வி.மதிமேனன், உதவி பிரதேச செயலாளர் எஸ். கமல்ராஜ், ஆலய குரு சுபா வாலமுரளி (முன்பள்ளி முன்னாள் இணைப்பாளர்), மெய்யியல் துறை தலைவர் வெ.அழகரெத்தினம், பிரதேச சபை உறுப்பினர் கோபிநாத், விபுலானந்த அழகியல் துறை பேராசிரியர் சு.சிவரெத்தினம், முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சி.அருந்ததி கலாச்சார உத்தியோகத்தர் பிரபாகரன், கோயில் போரதீவு விவேகானந்தர் பாடசாலை அதிபர் உலகேஸ்வரன், யாழ் மாவட்ட கிளிநொச்சி அறிவிப்பாளர் சி.வேதவனம், கிளிநொச்சி மாவட்ட சிகரம் இலவச கல்வி நிலைய நிர்வாகி கு.செல்வகலா, இலங்கை பட்டாதாரி ஒன்றிய தலைவர் க.அனிதன், சமூக செயற்பாட்டாளர் வே.பாஸ்கரன் உட்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.








