ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் சென்ற தாய்லாந்து கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக தாய்லாந்து போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு கப்பலில் இருந்த 23 பணியாளர்களில் 20 பேர் லைஃப் படகில் (Life boat) கப்பலை விட்டு வெளியேறி ஓமான் கடற்படையால் (Oman Navy) மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனால் மேலும் 3 பணியாளர்கள் இன்னும் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கப்பலின் பின்புறத்தில் வெடிப்பு ஏற்பட்டதுடன், இயந்திர அறையில் (Engine room) தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து முதல் தகவல் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் கிடைத்ததாக தாய்லாந்து கடற்படை (Royal Thai Navy) தெரிவித்துள்ளது. இந்த கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாட்டின் கலீஃபா துறைமுகத்திலிருந்து (Khalifa Port) புறப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது காணாமல் போன மூன்று பணியாளர்களை தேடும் மீட்பு பணிகள் தொடர்கின்றன.








