ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் மரண தண்டனையை அமல்படுத்தும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் புதிய சட்டத்திற்கு 8 முக்கிய முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, இந்தோனேசியா, ஜோர்டான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், இந்தச் சட்டம் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனவெறி மற்றும் பாகுபாட்டைத் தீவிரப்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.
மேலும், இஸ்ரேலிய சிறைகளில் கைதிகள் எதிர்கொள்ளும் சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நிலை குறித்து அமைச்சர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் பிராந்திய அமைதியைக் குலைக்கும் என்றும், சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.









