Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முற்றாக முடங்கிய நெடுந்தீவுக்கான படகுச்சேவை; பயணிகள் குற்றச்சாட்டு!

முற்றாக முடங்கிய நெடுந்தீவுக்கான படகுச்சேவை; பயணிகள் குற்றச்சாட்டு!

4 months ago
in செய்திகள்

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை (03.04) முதல் தனியார் கைகளுக்கு சென்றுள்ளதாகவும், இந்நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குட்பட்ட படகுகளில் ஒன்றான “குமுதினி” படகு திருத்தப் பணிகள் காரணமாக தற்போது சேவையில் ஈடுபடவில்லை.

இதேவேளை “வடதாரகை” படகு திருத்தப் பணிகளுக்காக திருகோணமலையில் இருந்தும், “நெடுந்தாரகை” படகு திருத்தப் பணிகளுக்காக நெடுந்தீவில் இருந்தும் பயணிகள் சேவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு சொந்தமான படகுகள் அனைத்தும் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தீவு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

தற்போது தனியார் படகான “கரிகணன்” படகு மட்டுமே பயணிகள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் காரணமாக வழக்கமாக இடம்பெறும் அதன் காலை 11.30 மணி சேவையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக படகு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் காலை 11.30 மணி சேவை நிறுத்தப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படகு சேவைகள் தொடர்பில் உரிய திட்டமிடல் இன்றி வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் செயற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பயணிகள் சேவைக்காக மாற்று ஏற்பாடுகளை செய்யும் விடயத்திலும் போதிய அக்கறை காட்டப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையில் உயிர்த்த ஞாயிறு விழா சிறப்பாக நடைபெற்றது

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையில் உயிர்த்த ஞாயிறு விழா சிறப்பாக நடைபெற்றது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.