ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டுள்ளார்.
ஈரானின் அரச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
இஸ்ரேல், அமெரிக்க கூட்டுத் தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டதாக ஈரான் பாதுகாப்பு படை குற்றஞ் சுமத்தியுள்ளது.
அவர் எங்கு கொல்லப்பட்டார் என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஈரான் தலைநகர் தெஹ்ரானைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தினால் ஏற்பட்ட அனைத்து சேதங்களையும் ஈடுசெய்ய, கப்பல் போக்குவரத்து மூலம் கிடைக்கும் சுங்க வரியின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் போது ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்று ஈரானிய ஜனாதிபதி அலுவலகத்தின் உதவியாளர் ஒருவர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.








