Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“அறிக்கைகளை மறைத்து வைத்திருந்தனர் கோட்டாபயவும் ரணிலும்”; அமைச்சர் ஆனந்த விஜேபால குற்றச்சாட்டு

“அறிக்கைகளை மறைத்து வைத்திருந்தனர் கோட்டாபயவும் ரணிலும்”; அமைச்சர் ஆனந்த விஜேபால குற்றச்சாட்டு

5 months ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சிரேஷ்ட நீதிபதி ஜனத் சில்வா வெளியிட்டுள்ள அறிக்கையை சில காலம் மறைத்து வைத்திருந்தார்.

அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவும் குண்டுத் தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை மறைத்தே வைத்திருந்தார் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவே அந்த அறிக்கைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கி விசாரணைகளை நடத்துமாறு அறிவித்தார்.

குறித்த அறிக்கைகளில் உள்ள 37500 பக்கங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு 10 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதில் உள்ள சில குற்றச்சாட்டுகளுக்கு குற்றவியல் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.அது தொடர்பில் சட்ட அதிபர் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயந்தவர்கள் பல்வேறு பிரதான சூத்திரதாரிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றனர்.பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் அவை பின்னால் செல்ல முடியாது.

அத்தோடு பொலிஸ் திணைக்களத்திற்கும் இதற்காக விசாரணைகள் நடத்த முடியாது.

நாங்கள் நீதியான பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தியுள்ளோம்.அதில் சிலர் நேரடியாக தொடர்பு பட்டிருந்தமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம்.

இதற்கான விசாரணைகள் நடைபெறுகின்றன.விரைவில் இந்த குண்டு தாக்குதலுக்கு உதவி செய்தவர்கள் மற்றும் சூத்திரதாரிகள் யார் என மக்கள் அறிந்து கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
Next Post
சுரேஷ் சலேவின் ஒற்றர்கள் பாதுகாப்புக் குழு கூட்டங்களில் நுழைந்திருந்ததாக தகவல் கசிவு!

சுரேஷ் சலேவின் ஒற்றர்கள் பாதுகாப்புக் குழு கூட்டங்களில் நுழைந்திருந்ததாக தகவல் கசிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.