Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுரேஷ் சலேவின் ஒற்றர்கள் பாதுகாப்புக் குழு கூட்டங்களில் நுழைந்திருந்ததாக தகவல் கசிவு!

சுரேஷ் சலேவின் ஒற்றர்கள் பாதுகாப்புக் குழு கூட்டங்களில் நுழைந்திருந்ததாக தகவல் கசிவு!

2 months ago
in செய்திகள்

சுரேஷ் சலே மற்றும் சஹ்ரான் குழுவினரின் ஒற்றர்கள் பாதுகாப்புக் குழு (Security Council) கூட்டங்களில் மேலும் ஒவ்வொரு கிழமைகளில் நடக்கும் பாதுகாப்பு குழுக் கூட்டங்களிலும் இருந்துள்ளமை நம்பத்தகுந்த வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.

மேலும் பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் அரசாங்க புலனாய்வு தகவல்கள் கூட சுரேஷ் சலே மற்றும் சஹ்ரான் குழுவினர் கைகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மஹித்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்து காலத்தில் தேசிய பாதுகாப்பு கூட உருதியாக இருக்கவில்லை என இவ்வாறான காரணங்கள் மூலம் தெரியவருகிறது.

பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் ஜனாதிபதி மற்றும் முப்படை பிரதானிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதமர் பொலிஸ் மாஅதிபர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி ஆகியோர் பங்குப்பற்றுவர்.

அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் தொடக்கம் 2019 ஏப்பிரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடக்கும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அன்றைய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவை பாதுகாப்பு குழுக் கூட்டங்களுக்கு வர வேண்டாம் என ஜனாதிபதி மஹித்திரி சிறிசேன தடைவித்திருந்தார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் தான் அரச புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டார். இவர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர்.

அரச புலனாய்வு பிரிவின் அத்தியட்சகராக பிரிகேடியர் பிரியந்த மாதந்திலகே பதவி வகித்தார். அரச புலனாய்வு பிரிவில் 35 இராணுவ புலனாய்வு அதிகாரிகளே இருந்தனர்.

பிரிகேடியர் பிரியந்த மாதந்திலகேவுக்கே அனைத்து புலனாய்வு தகவல்களும் வரும. அவர் அது தொடர்பில் ஆராய்ந்த பின்னரே புலனாய்வு பிரதானிக்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கொடுக்கப்படும்.

பிரிகேடியர் பிரியந்த மாதந்திலகே பாதுகாப்பு குழு கூட்டங்களில் எடுக்கப்படும் அனைத்து தகவல்கள்இ புலனாய்வு தகவல்கள் சுரேஷ் சலே மற்றும் சஹ்ரான் குழுவினருக்கு வழங்கியுள்ளார்.

குறிப்பாக குண்டு வெடிப்பு தொடர்பான தகல்கள் அனைத்தும் பகிரப்பட்டுள்ளதாகவே தெரியவந்துள்ளது.

அரச புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் குண்டு தாக்குதல் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர் புதுவருட விடுமுறைக்காக சிங்கப்பூர் பயணமார்.

அப்போது பதில் புலனாய்வு பிரதானியாக பிரிகேடியர் சிசிர மாதந்திலகே கடமையில் இருந்தார்.அச்சந்தர்ப்பத்தில் அதாவது குறித்த கிழமைக்கான பாதுகாப்பு குழு கூட்டம் 2019 ஏப்பிரல் 16 ஆம் திகதி நடக்கவில்லை.

அதற்கான காரணம் இன்று வரை தெளிவற்றே காணப்படுகிறது. கோட்டாபய ஜனாதிபதியான உடன் செய்த முதல் வேலையாக மலேசியா தூதுவராலயத்தில் கடமையாற்றிய சுரேஷ் சலேவை இலங்கைக்கு அழைத்து அரச புலனாய்வு பிரிவுக்கு பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் சுரேஷ் சலே கோட்டாபயவிடம் கதைத்து பிரிகேடியர் சிசிர மாதந்திலேகவை இராணுவ இரகசிய தகவல் மையத்தில் அத்தியட்சகராக நியமித்தார்.

இவ்வாறான பதவிகள் நம்பிக்கையானவர்களுக்கே வழங்கப்படும்.அதாவது அன்று நல்லாட்சி அரசாங்கத்தில் அரச புலனாய்வு பிரிவில் இருந்து கொண்டு சுரேஷ் சலேவுக்கு செய்த உதவியே அவருக்கு வழங்கப்பட்ட பதவியாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் பக்திபூர்வமாக நடைபெற்ற மருத்துநீர் காய்ச்சும் நிகழ்வு!

வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் பக்திபூர்வமாக நடைபெற்ற மருத்துநீர் காய்ச்சும் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.