அமெரிக்க – ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், ஈரானின் துணை இராணுவப் படையான புரட்சிகரப் பாதுகாப்புப் படை, ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பலொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இதில் கப்பல் சேதமடைந்ததோடு பதற்றமும் மேலும் அதிகரித்துள்ளது.
பிரித்தானிய இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் இந்தத் தாக்குதலை காலை 7.55 மணியளவில் இத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் சுற்றுச்சூழலில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








