Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விசாரணை ஆணைக்குழுவின் தலைவரை நியமித்ததே சுரேஷ் சலேயா?; சுவிஸ் இணையத்தளம் வெளியிட்ட அதிரடித் தகவல்!

விசாரணை ஆணைக்குழுவின் தலைவரை நியமித்ததே சுரேஷ் சலேயா?; சுவிஸ் இணையத்தளம் வெளியிட்ட அதிரடித் தகவல்!

3 months ago
in செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சிக்கு ஹன்ஸீர் ஆசாத் மௌலானா வழங்கிய கருத்துக்களை ஆதாரமாக கொண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்தார்.

குறித்த விசாரணை ஆணைக்குழுவின் தலைவரை ரணிலுககு பரிந்துரைத்தது சுரேஸ் சலே என்ற அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்களை சுவிஸர்லாந்தில் இருந்து இயங்கும் இணையத்தளம் ஒன்று ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு சுரேஸ் சலே ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளாரா? என்பதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவரை தெரிவு செய்தது சலே.

அதாவது தனது குற்றங்களை விசாரிப்பதற்கு தானே ஒருவரை நியமிப்பது வேடிக்கையானதாகவுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜயக்கி அல்விஸ் சலேவால் சிபாரிசு செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்.

கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவின் அத்தியட்சகராக செயற்பட்ட பிரசன்ன அல்விஸின் சகோதரியே நீதிபதி ஜயக்கி அல்விஸ் ஆவார்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வங்கிகளில் இருந்த பணத்தை சூறையாடுவதற்கு கோட்டாபய மற்றும் சுரேஷ் சலேவுக்கு உதவி செய்தவர் தான் பிரசன்ன அல்விஸ்.

இவர்கள் அனைவரும் ஒரே கூட்டணியை சேர்ந்தவர்களாவர். மேலும் இந்த பிரசன்ன அல்விஸின் மனைவி பிரதி பொலிஸ் மா அதிபர், அதாவது சுரேஷ் சலேவுடன் அரசாங்க புலனாய்வு பிரிவில் கடமையாற்றியவர்.இவ்வாறு அனைவரும் நெருங்கிய நண்பர்களாவர்.

மேலும் ரணில் விக்ரமசிங்கவினால் 2024.06.12. நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு குறுகிய மூன்று கிழமைகளில் விசாரணைகள் நிறைவு செய்து சுரேஷ் சலே ஈஸ்டர் குண்டு தாக்குதலில் சம்பந்தப்படவில்லையென விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று சலேவுக்கு சார்பாக பேசுபவர்கள் இந்த ஜயக்கி அல்விஸின் விசாரணை அறிக்கையையே காரணம் காட்டி பேசுகின்றனர்.

ரணிலின் ஆட்சியில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மிக கடமையை கொண்டுள்ள ரணிலும் குற்றவாளிகளை காப்பாற்றவே முயற்சித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான காலத்தில் 2023 ஜுலை மாதம் ஓய்வு பெறும் வயதையடைந்த சுரேஷ் சலேவுக்கு ஒரு வருடம் பதவி நீடிப்பும் வழங்கியுள்ளார்.

இந்த பதவி நீடிப்பு இரு முறை வழங்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களை காப்பற்றவே முயற்சித்தமை ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
Next Post
தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.