Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்குக் கத்தி முனையில் மரண அச்சுறுத்தல்!

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்குக் கத்தி முனையில் மரண அச்சுறுத்தல்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டியவிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து உயர் தர மாணவர்களுக்கு கத்தி முனையில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொட்டாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் சுற்றுச் சுவரை ஏறிக்குதித்து, பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் இரு மாணவர்களின் கழுத்தில் கூரிய ஆயுதத்தை வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

பாடசாலையின் மைதான எல்லைக்கு அருகில் உள்ள மாமரம் ஒன்றிலிருந்து, மாணவர்கள் குழுவொன்று மாம்பழம் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவர்களைத் திட்டியுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் குழுவினர் அந்த இளைஞரை நோக்கி கூச்சலிட்டுள்ளனர்.

இதன் போது ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பாடசாலையின் சுவரை ஏறிக்குதித்து உள்ளே வந்து, இரண்டு மாணவர்களைப் பிடித்து அவர்களின் கழுத்தில் கத்தி போன்ற கூரிய ஆயுதத்தை வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் பிரதி அதிபரால் கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்
செய்திகள்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்

June 27, 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!

June 27, 2026
வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!
செய்திகள்

வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!

June 27, 2026
பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 27, 2026
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!
செய்திகள்

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

June 27, 2026
நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!
செய்திகள்

நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!

June 27, 2026
Next Post
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் எடுத்துள்ள சபதம்

அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் எடுத்துள்ள சபதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.