Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்குக் கத்தி முனையில் மரண அச்சுறுத்தல்!

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்குக் கத்தி முனையில் மரண அச்சுறுத்தல்!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டியவிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து உயர் தர மாணவர்களுக்கு கத்தி முனையில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொட்டாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் சுற்றுச் சுவரை ஏறிக்குதித்து, பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் இரு மாணவர்களின் கழுத்தில் கூரிய ஆயுதத்தை வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

பாடசாலையின் மைதான எல்லைக்கு அருகில் உள்ள மாமரம் ஒன்றிலிருந்து, மாணவர்கள் குழுவொன்று மாம்பழம் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவர்களைத் திட்டியுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் குழுவினர் அந்த இளைஞரை நோக்கி கூச்சலிட்டுள்ளனர்.

இதன் போது ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பாடசாலையின் சுவரை ஏறிக்குதித்து உள்ளே வந்து, இரண்டு மாணவர்களைப் பிடித்து அவர்களின் கழுத்தில் கத்தி போன்ற கூரிய ஆயுதத்தை வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் பிரதி அதிபரால் கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
உலக செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

August 14, 2026
மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!
செய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!

August 14, 2026
ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு; நால்வர் பலி
செய்திகள்

ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு; நால்வர் பலி

August 14, 2026
போக்குவரத்து சோதனைகளில் மறைவிடங்களை தவிர்க்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

போக்குவரத்து சோதனைகளில் மறைவிடங்களை தவிர்க்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!

August 14, 2026
கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

August 14, 2026
சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!
செய்திகள்

சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!

August 14, 2026
Next Post
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் எடுத்துள்ள சபதம்

அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் எடுத்துள்ள சபதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.