Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மெட்டா நிறுவனத்திற்கு பில்லியன் கணக்கில் அபராதம்?; சிறார் மனநல பாதிப்பு குறித்த வழக்கின் 2ஆம் கட்ட விசாரணை ஆரம்பம்

மெட்டா நிறுவனத்திற்கு பில்லியன் கணக்கில் அபராதம்?; சிறார் மனநல பாதிப்பு குறித்த வழக்கின் 2ஆம் கட்ட விசாரணை ஆரம்பம்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள், சிறார்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மனநலத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் தொடரப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நியூ மெக்சிகோ மாநிலத்தின் சாண்டா ஃபே நீதிமன்றத்தில் தொடங்கியது.

இந்த வழக்கை நியூ மெக்சிகோ தலைமை சட்டத்தரணி ரவுல் டோரெஸ் முன்னெடுத்துள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் தளங்கள் சிறார்களைப் பாலியல் சுரண்டல்களில் இருந்து பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும், அவர்கள் அந்தத் தளங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்துத் தவறான தகவல்களைத் தந்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காக மெட்டா நிறுவனத்திற்கு 375 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது தொடங்கியுள்ள இரண்டாம் கட்ட விசாரணையில், மெட்டா நிறுவனம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தால், பில்லியன் கணக்கிலான டொலர்கள் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி, சிறார்களுக்கான வயது சரிபார்ப்பு, ஆட்டோபிளே வசதியை நீக்குதல் மற்றும் அல்காரிதம்களை மாற்றியமைத்தல் போன்ற கடுமையான மாற்றங்களைச் செய்ய மெட்டா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிடக்கூடும்.

ஆனால், சமூக வலைதளங்களால் மனநலப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லை என்று மெட்டா நிறுவனம் வாதிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.