கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின் பாதுகாப்பு வேலியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மாவில்மட பகுதியைச் சேர்ந்த 66 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது வீட்டின் முன்பகுதியில் பாதுகாப்பு வேலியைப் பழுதுபார்ப்பதற்காக கிரைண்டர் இயந்திரத்தைப் பயன்படுத்தியபோது, ஏற்பட்ட விபத்தில் அவரது கழுத்து அறுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








