தமிழ் சமூகப் பிரிவின் செயலாளராகவும், கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும் உமா சந்திரா பிரகாஸ் இன்று (06) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனக் கடிதங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தமக்கு வழங்கப்பட்ட நம்பிக்கைக்காக நன்றி தெரிவித்த அவர், தமிழ் சமூகத்திற்கும், கொழும்பு மாவட்ட மக்களுக்கும், அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன் என உறுதியளித்துள்ளார்.
நீதி, முன்னேற்றம், சிறந்த எதிர்காலத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.








